ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை!!

 


வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேர் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தனர்.


இதனையடுத்து பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இது பரவலடையும் சந்தர்ப்பத்தில் பாரிய கொத்தணியாக உருவாகுவதற்கு அதிகமான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.


வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தனியார் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றதாக கூறப்படுகிறது. எனவே தொற்று பரவலடையும்போது அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


இதன் காரணமாக மாவட்ட நிர்வாகமும் சுகாதார பிரிவினரும் இந்தவிடயம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி ஆடைத்தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டுமென பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.