இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

 


கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அண்மைய நாட்களில் இந்தியாவில் வேகமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்த 553 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 73 இலட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது.


இவர்களில் 2 கோடியே 46 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 24 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 842 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 15 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.