கொரோனா தொற்று - வடக்கில் பதிவான இரண்டாவது சம்பவம்!
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் ஒருவர் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் குழந்தை பிரசவித்துள்ளார்.
41 வயதான குறித்த கர்ப்பவதி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கண்காணிப்பில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி குறித்த பெண் குழந்தை பிரசவித்துள்ள நிலையில் குழந்தைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வடக்கில் தொற்றுக்குள்ளான தாயார் குழந்தை பிரசவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை