அன்னையர்தின வாழ்த்துகள்!!


 தாய்....

என்தாய்...

செந்தாய் ....

தமிழ்த் தாய்...


குருதி சிந்தி குளித்தவளே!!

காத்தலுக்காய் உதித்தவளே!!

மானம் காத்த மறத்தியே!!

இன மானம் காத்த பெருந்தீயே!!


குவலயத்தில் உன் பெயர்

குறைவின்றி ஒலிக்குதம்மா.....

பாரெங்கும் நின் மொழி

பவனியாய் உலவுதம்மா.....


நீ கொண்ட இலட்சியங்கள்

நீர்த்திங்கு போனாலும்

வீழாது உன் விம்பம்

வேகாது நின் தேகம்.....


தரணியெங்கும் வாழ்கின்ற

 மகவுகள் ஒன்றாகி 

சூடுகின்றோம் பாமாலை...

ஒருமுறைதான் கேளாயோ!!


தேன் தமிழ் சாகரமே,

தித்திக்கம் பூஞ்சுவையே,

ஒப்பற்ற உன் வீரம்

ஒய்யார இருக்கை அம்மா...


தாலாட்டும் உன் பாட்டில்

சீராட்டும் உன் அழகில்

செந்தணல் சுவையுண்டு,

அற்புத கனியுண்டு,...


சேரனும் சோழனும்

பாண்டிய வம்சமும்

மறவராய் நீ தந்த

மன்னவ முத்துகள்...


கடாரம் கொண்டவனை

 கருக்கொண்டாய் நீயம்மா.....

இன்று, நேற்று நாளை கடந்து

நீ....நீயாகிறாய்.....என் தமிழ் தாயம்மா!!


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.