பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு!!

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.


தற்போது புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், இதனால் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டுமெனவும் அவரது தயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.


அவரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.