ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி நாளை முதல் போடப்படும்!
ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி , கொழும்பில் உள்ள கொதடுவை சுகாதாரப் பிரிவின் மதின்னகொட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாளை முதல் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியானது 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல் டோஸ் வழங்கப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 185,000 தடுப்பூசி குப்பிகளை ரஷ்யா இந்த மாத இறுதியில் அனுப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை