இலங்கையர்கள் ஐக்கிய அரபு இராச்சியதிற்குள் நுழைய தடை!

 


இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது.


கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எதிர்வரும் புதன்கிழமை இரவு முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.


பிற நாடுகளின் ஊடாக, ஐக்கிய அரபு இராச்சியதிற்குள் நுழையும் பயணிகள் இந்த நான்கு நாடுகளிலும் 14 நாட்களுக்குள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்கான சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.