கிளிநொச்சியில் 14பேர் அதிரடியாக கைது!!
பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கிளிநொச்சி மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 4 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. கிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பயணக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கத் தாக்கல் செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை