பிரான்சில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிரான்ஸ் நாட்டிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
இதனை வகையில் பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கையில், தற்போது வரையில் 27 மில்லியன் மக்கள் தங்களது முதலாவது தடுப்பூசியையும், 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது 2 தவணை கொரோனா தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த வகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐரோப்பியர்கள் அனைவரும் PCR முடிவுகளின்றி பிரான்ஸ் நாட்டுக்கு வருகை தரலாம் எனவும், இந்த விதியானது பிரித்தானியர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது பிரான்ஸ் சுகாதார அமைச்சகம். மேலும்பிரித்தானியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் PCR முடிவுகள் கட்டாயம் எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
ஏனெனில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகள் இடையே ஏராளமான ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். குறிப்பாக இவ்விரு நாடுகளிலும் சம பங்கினர் இவ்விரு நாடுகளிலும் வாழ்கின்றனர்.
உதாரணமாக பெற்றோர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தால் பிள்ளைகள் பிரித்தானியாவில் எளிமையாக வாழும் நடைமுறை உள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் பிரான்ஸின் இந்த முடிவு கொரோனா காரணத்தைக் சுட்டிக் காட்டினாலும் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை