தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை!

 


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 9 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் “சிறு துறைமுகங்களை ஒழுங்குப்படுத்துவதாக கூறி மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக சட்டமூலம் மாநில அரசின் பல அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது.

இதனால் மாநில அரசின் கீழ் இருக்கும் சிறு துறைமுகங்களின் மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படும் என்பதால் நாளை மறுநாள் மத்திய அரசு நடத்தும் மாநில அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.