ஒரே நாளில் 1,664 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

 


கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த ஆயிரத்து 664 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.


இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் இவ்வாறு 45 விமானங்களின் மூலம் ஆயிரத்து 664 பேர் நாடு திரும்பியுள்ளனர்.


இந்தக் காலப்பகுதியில் 16 சரக்கு விமானங்களும் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் இந்தக் காலப்பகுதியில் 23 விமானங்களின் மூலம் 675 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.