அவசர தேவைகளுக்காக 2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு!!
ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் திறந்திருக்கும் என பொருளாதார புத்துணர்ச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்றும் நாளை மற்றும் நாளை மறுதினம் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு செல்வதற்கு இராணுவத்தினரால் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓய்வூதியத்தை பெற வரும் மக்கள் தங்கள் ஓய்வூதிய அடையாள அட்டைகளை அனுமதி அட்டைகளாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை