மட். வாழைச்சேனையில் நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்பு!!


 மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிணற்றிலிருந்து நான்கு வயது சிறுவன் ஒருவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், தந்தையுடன் இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் குறித்த சிறுவன் காணமால் போன நிலையில் சிறுவனை தேடிப் பார்த்த போது சிறுவன் கிணற்றினுள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட எம்.எம்.எம்.நளீம், எம்.ரீ.சித்தி சமீறா தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையான நளீம் ஹாபில் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலைச் சம்பவமா என்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் அவர்களின் உத்தரவுக்கமைய சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் சம்பம் தொடர்பாக மட்டக்களப்பு தடயியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.