நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு!!
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனவே ஒவ்வொரு மாகாணத்தின் எல்லைகளிலும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற அனுமதி வழங்கப்படாத அதே நேரத்தில் வெளியாட்கள் அந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சுகாதாரம், பாதுகாப்பு, நீர், தகவல் தொடர்பு, மின்சாரம், ஊடகம் மற்றும் தொடர்புடைய சேவைகள், நீதித்துறை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல் தொடர்ந்து செயற்படும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை