இந்திய தூதுவரைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!!

 


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்திய தூதரிற்குமிடையில்  இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடல்  இன்று காலை இந்திய இல்லத்தில் நடக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பிற்குச் சென்ற கூட்டமைப்பின் தலைவர்கள், இந்த சந்திப்பிற்காக தொடர்ந்து கொழும்பில் தங்கியுள்ளனர்.

இந்த சந்திப்பிற்கான அழைப்பை இந்திய தூதரகமே விடுத்துள்ளது. அண்மையில் இலங்கையில் பல பாகங்கள் சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டு வரும் நிலையில், திடீரென தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய தூதர் சந்திப்பிற்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.