மேலும் 828 பேருக்கு கொழும்பில் கொரோனா தொற்று!

 


இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 94 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பில் 828 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 170 பேர் கொழும்பு நகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பதிவாகியுள்ளனர்.

இதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் 544 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 255 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 224 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் களுத்துறை, கண்டி, காலி, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தலா 100 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து 357ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.