13 பேருக்கு பருத்தித்துறையில் கொரோனா தொற்று!!

 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை - கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 10 மாத குழந்தை மற்றும் கர்ப்பவதி உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

அதன்படி நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 5 பேருக்கும், கரணவாய் கிராம அலுவலகர் பிரிவில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் யாழ்.மத்திய கல்லூரி ஆசிரியரின் மனைவிக்கும், கரவெட்டி கிழக்கில் மதிப்பீட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் மனைவி மற்றும் பிள்ளைக்கும், மாவட்ட செயலகத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க பணியாளர் அவர்களுடன் தொடர்புபட்ட அவரின் சகோதரி, பெறாமகள் மற்றும் 10 மாத குழந்தைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் கரணவாய் பகுதியில் செலிங்கோ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் கர்ப்பவதியான மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கரவெட்டி வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், பொலீஸார் இருவருக்கும் பருத்தித்துறை நீதிமன்றில் பணி புரிந்த ஒருவருக்கும் என ஒட்டு மொத்தமாக வடமராட்சி பகுதியில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.