உயிரிழந்த நிலையில் கிரான்குளம் கடற்கரையிலும் கடலுயிரினங்கள்!!

 


மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட டொல்பின் மீன் ஓன்றும் இன்று கரையொதிங்கியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தையண்டிய கடல்பகுதியில் எக்ஸ் பிரஸ்,கப்பலில்தீ பரவியதுடன் கடலில் கப்பல் மூழ்கியதையடுத்து பல பிரதேசங்களில் கடற்கரையில் ஆமைகள் டொல்பீன் மீன்கள் உயிரிழந்து கரையொதிங்கி வருகின்றன.

இந்த நிலையில் மட்டக்களப்பு கடல்பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆமைகள் டொல்பீன் மீன் கரையொதிங்கிய நிலையில் அது தொடர்பாக மீனவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை இன்னும் பல ஆமைகள் கடலில் கரையொதுங்கி வருவதாக இன்று கடலில் மீன்பிடிக்க சென்ற கரைக்கு திரும்பி வந்தடைந்த மீனவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.