காலியில் யுவதியை கடத்திச் சென்று கொள்ளை!!

 


காலி,கராப்பிட்டிய வங்கியொன்றுக்கு அருகில் மகிழுந்துடன் 26 வயதான இளம் யுவதியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது சகோதரியுடன் கராப்பிட்டிய பகுதியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்றிருந்தபோதே குறித்த யுவதி மகிழுந்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். யுவதியை கடத்திச் சென்ற சந்தேகநபர், ரத்கம பகுதியில் வைத்து யுவதியை வாகனத்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.

அத்துடன் யுவதியிடமிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் அவர் அணிந்திருந்த தங்க நகையையும் கொள்ளையிட்டு அவ்விடத்திலேயே அவரை இறக்கிவிட்டு சந்தேகநபர் மகிழுந்தை கடத்திச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி வீடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து பூஸா பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்ட மகிழுந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.