உணவுகளை சமைத்து விற்பதற்கு அனுமதி!!
கிராம மட்டத்தில் சமைத்த உணவுகளை விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தினால் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுத்தலுக்கமைய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையை ஒழிக்கும் ஜனாதிபதி செயலணியின் கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து அல்லது சிறிய வியாபார மட்டத்தில் சமைத்த உணவுகளான இடியப்பம், பிட்டு, றொட்டி போன்ற உணவுகளை பிரதேச செயலக மட்டத்தில் முச்சக்கர வண்டிகளிலோ அல்லது மோட்டார் சையிக்கிளை பாவித்து, சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து விற்பனையில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை