மஹிந்தவின் மனைவி மருமக்கள் தான் மிஞ்சியுள்ளனர் - ஜேவிபி!!

 


மூன்றிலிரண்டு பெரும்பான்மையில்லாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றார்கள், பின் 20ம் திருத்தச் சட்டம் இல்லாமல் முடியாது என்றார்கள், தற்போது பசில் ராஜபக்ச இல்லாமல் முடியாது என்ற நிலைக்கு அரசாங்கம் சென்றுள்ளதாக ஜே. வி. பி தெரிவித்துள்ளது.

இனி, மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் மரு மக்களுக்கும் அமைச்சுப் பதவி கொடுத்தால் தான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையெனவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜுலை முற்பகுதியில் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆகக்குறைந்தது இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர் அதிகாரத்துக்க வந்த பின்னரே பொருளாதாரம் சீராகும் என பெரமுன தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

ஜுலை முற்பகுதியில் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆகக்குறைந்தது இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர் அதிகாரத்துக்க வந்த பின்னரே பொருளாதாரம் சீராகும் என பெரமுன தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.