நாடு திரும்பிய இலங்கை வீரர்கள் தனிமைப்படுத்தலில்!




இங்கிலாந்துக்கான கிரிக்கெட் வியஜத்தின்போது சுகாதார பாதுகாப்பு குமிழி விதிகளை மீறியதால் தடைக்குள்ளாகி நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று வீரர்களும் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாகவும் தற்போது அவர்கள் நீர்கொழும்பிலுள்ள ஹொட்டெல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அங்கு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை நிறைவு செய்ததுடன் இன்று ஆரம்பமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடிவருகின்றது.

குறிப்பிட்ட மூன்று வீரர்களும் டேர்ஹாமில் இருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுகாதார பாதுகாப்பு குமிழியை மீறியதால் இலங்கைக்கு உடனடியாகத் திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களுக்கு தற்காலிக தடையையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ளது.

குசல் மெண்டிஸும் நிரோஷன் திக்வெல்லவும் டேர்ஹாம் வீதிகளில் இரவு வேளையில் அலைந்துதிரிந்தமை தொடர்பான வீடியோ காட்சி சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்தே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, வீடியோ காட்சியின் உண்மைத்தன்மையை கண்டறிந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அணி முகாமையாளருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தரவிட்டுள்ளது. வீரர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்திருந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.