கரவெட்டி வியாபாரிகள் கவனத்திற்கு விடுக்கப்பட்டுள்ள தகவல்!!

 


கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் கொண்டு சென்று வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தமது அனுமதி பத்திரத்தை புதுப்பிக்குமாறு கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் அறிவித்துள்ளார்.

இன்று 14ம் திகதியுடன் முன்னர் வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்திற்கான கால எல்லை முடிவடைந்துள்ள நிலையில் அதனை புதுப்பித்து தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளார்.
அத்துடன் அனுமதிப்பத்திரத்தை விண்ணப்பிக்கும் வியாபாரிகள் தாம் வசிக்கும் கிராம அலுவலகர் மற்றும் வியாபாரம் மேற்கொள்ளவுள்ள கிராம அலுவலகர்கள் கடிதங்களோடு தாம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டு வர்த்தக சங்கத்தின் அனுமதியுடன் ஒப்படைக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.