பயணக்கட்டுப்பாடு நீக்கம் - ஒரு நாளில் 11 பேர் பலி!
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவற்றுள் 8 மரணங்கள் நேற்றைய தினத்தில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளொன்றில் 11 மரணங்கள் பதிவாகின்றமை சாதாரணமான ஒரு நிலமை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாதசாரிகள் இருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 பேர், சைக்கிளில் பயணித்த 2 பேர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை