முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம்!

 


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த நபரின் சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து நேற்று இரவு முதல் கணவனை காணவில்லை என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.