சபையில் மோதிய நாமல்- சாணக்கியன்!!

 


முகநூல் மூலமாக கருத்துக்களைப் பதிவிட்ட 100ற்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த வருடத்தில் மாத்திரம் இந்த 100 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் சொந்தக் கருத்துக்களைக்கூட இளைஞர்களுக்குப் பதிவிட முடியாத நிலைமை இருப்பதாகவும் சாணக்கியன் கூறியுள்ளார்.

இதேவேளை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய இரா.சாணக்கியன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்று கைதான இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரினார்.

அதோடு இந்த விவகாரம் குறித்தும் ஏற்கனவே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கம் எடுக்கும் முயற்சியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உள்ள நிலையில் நேற்று மட்டும் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்றும் நாமல் ராஜபக்ஷ, இதன்போது கேள்வியெழுப்பி இருந்தமை குரிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.