கடல் உணவுகள் குறித்து நீரியல்வள திணைக்களத்தின் அறிவிப்பு!!

 


கடல் உணவுகளை உட்கொள்வதில் எந்தவித பிரச்சினையும் கிடையாதென தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (நாரா) அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்ஜன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவிக்கின்றார்.

மேலும் தீபற்றிய எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயண பதார்த்தங்கள் மற்றும் ஏனைய பதார்த்தங்களினால் கடல் உணவுகளை உட்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக பல்வேறு தரப்பினர், பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.

மேலும் இந்த நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாரா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையின் பிரகாரம், கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.