அவசர உரையாடலில் இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள்!!

 


இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தொலைபேசி ஊடாக இன்று கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடல் பற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், இருநாட்டு வர்த்தகம் மற்றும் பலதரப்பட்ட உறவுகள்சார்ந்த விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகக் கூறியுள்ளார்.

அத்துடன் வலய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் இராஜதந்திர உறவுகள் பற்றியும் இதன்போது பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.