இலங்கை, GSP+ வரிச்சலுகைக்காக சட்டத்தை திருத்துகிறது!!

 


ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தியமைக்க அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.

உள்நாட்டு ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய தகவலுக்கமைய, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை விரைவில் இலங்கைக்கு வரும்படி அரசாங்கம் அழைப்பு விடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற அரசாங்கம் விருப்பம் வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.