திறக்கப்பட்டன தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்!
இலங்கையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, வத்தரணுவெண்லா, சீதாவக்க கடுவலை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 10,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதானால் தெதுரு ஓயாவை அண்மித்த மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை