வெற்றி இயக்குனருடன் 3வது முறையாக இணையும் மாதவன்!!

 


பிரபல இயக்குனரின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் மாதவன் மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி என்பதும் ’ஆனந்தம்’ ’ரன்’ ’பையா’ ’சண்டக்கோழி’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ‘சண்டக்கோழி 2’ படத்திற்கு பின் அவர் திரைப்படங்கள் இயக்காமல் இருந்தார்.



இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை லிங்குசாமி செய்து வருகிறார். ராம் பொத்தனேனி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த இந்த படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டர் ஹீரோவையே டாமினேஷன் செய்யும் அளவுக்கு வலுவானது என்பதால் இந்த கேரக்டருக்கு பிரபல ஹீரோ ஒருவரை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது மாதவனிடம் லிங்குசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. வில்லன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.