டிஜிட்டல் கலை மையம் டுபாயில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது!!

 


துபாயில் டிஜிட்டல் கலை மையத்தில் அசையக் கூடிய ஓவியங்கள் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில் நாளை மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலை மையம் துபாய் கலாச்சாரம் மற்றும் கழகத்தின் சார்பாக ஓவியங்கள் திரையில் நான்கு திசையும் அசையும் வகையில் ஒளிர்ந்து பிரம்மாண்டமாக இருக்கும்படியாக டிஜிட்டல் கலை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் 2700 சதுர மீட்டர் பரப்பளவுடன், பல வடிவங்களில் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே அறையின் சுவர்களும், திரைத்தளங்களும் திரையாக உபயோகப்படுத்தப்படுகிறது.

அழகான உருவங்களை திரையில் காட்ட, கலை மையத்திற்குள் 130 புரஜெக்டர்களும், அசையக்கூடிய ஓவியங்களும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓவியங்கள் உணர்வுபூர்வமான நிலையில், இசையுடன் மக்கள் ரசிக்கும் வகையில் அரங்கத்தில் 58 ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அசையக்கூடிய 3000 ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியங்களில் பசுமையான காடுகளும், கடல் அலைகளும், மரங்கள், தெருக்கள் என்று ரசிப்பதற்கு மிக அழகாக உள்ளது. இந்த டிஜிட்டல் கலை மையமானது, துபாய் கலாசார மற்றும் கலை ஆணையத்தின் தலைவரான ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் என்பவரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

  Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.