பிறந்தநாளில் திக்குமுக்காடிய இராணுவத் தளபதி!!

 


தனது கைத்தொலைபேசிக்கு ஒரேநாளில் 3000ற்கும் அதிகமான குறுந்தகவல்கள் வந்து குவிந்ததினால் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பெரும் திக்குமுக்காடியுள்ளார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கடந்த 22ஆம் திகதி 57ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினத்தில் அரசியல்வாதிகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக அழைப்பெடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் அன்றைய தினத்தில், இராணுவத் தளபதியின் கையடக்கத் தொலைபேசிக்கு 2000ற்கும் மேற்பட்ட வாழ்த்துச் செய்திகளும், வாட்ஸப் செயலியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்த்துகளும் குவிந்திருக்கின்றன.

இந்நிலையில் அந்த வாழ்த்துச் செய்திகளுக்கு இன்றும் அவர் நன்றி கூறி பதிலளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.