தெலுங்கானாவில் பொதுமுடக்கம் நீக்கம்!!


 தெலுங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது.

குறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்துத் துறைகளும் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை ஜூலை முதலாம் திகதி முதல் திறக்கவும் தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் மக்கள் அலட்சியமாக இல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் தெலுங்கானா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.