தமிழகத்தில் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!!


 தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன் (திங்கட்கிழமை) முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய முடக்கத்தை ஜூன் 28ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மாவட்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும் நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் இந்த முடக்கத்தை நிடிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.