செவிப்புலனற்றோர் வளாகத்தில் விசேட தேவையுடைய ஆணின் சடலம்!!

 


மட்டக்களப்பு- இருதயபுரம் ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன் குரூஸ் (49 வயது) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


மட்டு.மாவட்ட செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.