காலநிலை பாதிப்பு ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம் மற்றும் களுத்துறை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 303 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அதிகமழை, வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அனர்த்தங்களில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
அதேநேரம், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை