ரஷ்யா சென்று தடுப்பூசி பெற்ற இராஜாங்க அமைச்சர்!!

 


முதலீட்டு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவசரமாக ரஷ்யாவுக்கு பயணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நேற்று முன்தினம் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.


குறிப்பாக ஸ்புட்னிக்-v கொரோனா தடுப்பூசிகள் தொகையொன்றை ரஷ்யா அண்மையில் இலங்கைக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில் அதற்கு மேலதிகமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்த கலந்துரையாடலை நடத்தவே அவர் ரஷ்யா சென்றதாக சொல்லப்படுகிறது.


இலங்கையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல்சுற்று தற்போது மக்களுக்கு அளிக்கப்படுகின்றது. எனினும் இரண்டாவது சுற்றுத் தடுப்பூசியை அளிக்க நெருக்கடி நிலை ஏற்படலாம் என்பதை உணர்ந்தே அரசாங்கம் சார்பில் ரஷ்யாவிடம் பேச்சு நடத்த அஜித் நிவாட் சென்றிருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.