29 பேர் விமான தாக்குதலில் பலி!!


பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயங்களுடன் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில் இன்னும் 17 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. புதிதாக ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 100 வீரர்களுடன் வந்த இந்த சி-130 ரக விமானம், மணிலாவுக்கு தெற்கே 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றது.

அப்போது ஓடுதளத்தில் இருந்து தவறி பாய்ந்த விமானத்தை மேலே உயர்த்த விமானி முயன்றார். ஆனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அப்போது சில வீரர்கள் விமானத்தின் ஜன்னல்கள் வழியாக தப்பி குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.