கொரோனா தொற்றாளர்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?


தொடர்ச்சியாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இந்நாட்டில் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் (03) 1,200 வரை கொரோனா தொற்றாளர்கள் குறைவடைந்திருந்தனர்.

அதேபோல், கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்கள் குறிப்பிடதக்க அளவில் குறைவடைந்து நேற்றைய தினம் 98 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற செவிலியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்க கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.

வேலை நிறுத்தம் காரணமாக பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்தன. தொற்றாளர்கள் குறைவடைய இதுவும் ஒரு காரணம். சமூகத்தில் போன்று வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்த போராட்டங்கள் உள்ள போது பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடையும். எவ்வாறாயினும், விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் குறைந்த நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் நேற்று (03) நாட்டில் பதிவாகி இருந்தனர்.

25 மாவட்டங்களிலும் 1,262 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நாட்டில் இறுதியாக 1,200 க்கும் குறைவான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.