கிண்ணத்தைக் கைப்பற்றியது அர்ஜென்டினா!!
47 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ளது.
பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் 1 – 0 எனும் கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
14 ஆண்டுகளில் முதன்முறையாக இரு அணிகளும் இறுதி போட்டியில் சந்திக்க இறுதி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் முதல் பாதியின் 27-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து அவ்வணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதனை பின்னர் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காமல் போக 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை