அத்தியாவசிய சேவைக்காக மேல்மாகாணத்தில் 11,438 தனியார் பஸ்கள்!

 


கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மேல்மாகாணத்தில் அத்தியாவசிய சேவைக்காக 11 ஆயிரத்து 438 தனியார் பஸ்கள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண பயணிகள் போக்கவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்தார்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 5,263 பஸ்களும், கம்பஹா மாவட்டத்தில் 3,483 பஸ்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 2,692 பஸ்களும் பொது போக்கவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.