14 வயதான சிறுமி கர்ப்பம்- இளைஞர் கைது!!
பதினான்கு வயதான சிறுமியை, கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞன் மடுல்சீமை பொலிஸாரால் கைது செய்செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாயாரை கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டபோது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சிறுமி கர்ப்பிணியாகிய விடயம் தொடர்பில் , பிரதேச குடும்பநல தாதி , மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து மடுல்சீமை பெண் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாயையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கர்ப்பிணியான சிறுமி தொடர்பான வைத்திய அறிக்கையைப் பெற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர், விசாரணையின் பின்னர் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை