ஆளுந்தரப்பின் திணறல் - சஜித் அணியின் இரகசிய திட்டம்!!

 


தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் கைதுசெய்து தடுத்து வைப்பதற்கு எதிராக இன்று (09) கொழும்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இந்த போராட்டத்தை நடத்தவுள்ளது. இன்று பிற்பகல் போராட்டம் நடத்தப்படும் என்று அறியப்படுகிறது, ஆனால் இதுவரை எந்த இடமும் அறிவிக்கப்படவில்லை.

தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இன்று காலையில், ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் எதிர்ப்பை சுகாதார நடவடிக்கைகளை காரணம் காட்டி அரசு ஒடுக்குவதாக எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்புக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.