சுயதனிமைப்படுத்தலில் வல்லிபுரக் கோயில் நிர்வாகிகள்!!

 


கொவிட் நடைமுறைகளை கடைப்பிடிக்காது ஆலய வழிபாட்டினை நடாத்தி வடமராட்சி வல்லிபுர ஆலய நிர்வாகத்தினர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20 மற்றும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவான பக்தர்களை ஒன்று கூட்டி கொவிட் நடைமுறைகளை கடைப்பிடிக்காது ஆலய வழிபாட்டினை நடாத்துவதாக கொவிட் கட்டுப்பாடு உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்ட விசாரணை அடிப்படையில் குறித்த நிர்வாகத்தினரை சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
 கடந்த வருடம் குறித்த ஆலயம் கொவிட் கட்டுப்பாடுகளை மீறி வழிபாடுகளை நடாத்தியமைக்காக ஆலயம் சில காலம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.