வடக்கில் 135 பேருக்கு கொரோனா தொற்று!!

 


யாழ்.மாவட்டத்தில் 101 பேர் உட்பட வடக்கில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.

அதன்படி யாழ்.மாவட்டத்தில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் இதுவரை 6,699 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை மாவட்டத்தில் 1,550 ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 06 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,614 ஆக உள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் - 05 பேருக்கு தொற்று - இதுவரை மாவட்டத்தில் 1,372 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 04 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்னிக்கை 1,337 ஆக உயர்வடைந்துள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.