அரசாங்கம் தொல்பொருள் வளங்களை விற்கிறது!!

 


தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கிறது என்று சமகி ஜனபலவேகய குற்றஞ்சாட்டியுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் வெளிநாட்டினருக்கும் வணிகர்களுக்கும் விற்கப்பட்டதாகக் கூறப்பட்ட, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை மீள கொள்வனவு செய்வதாக உறுதியளித்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போதைய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தனர் என்று தலதா எம்.பி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நிதி அமைச்சின் மூலம் செலாண்டிவா முதலீடுகளை அரசாங்கம் நிறுவியதாகவும், கொழும்பிலுள்ள தொல்பொருள் மதிப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்களை விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள பல கட்டடங்களை விற்பனை செய்வது குறித்து நகர அபிவிருத்தி அதிகாரசபை, விளம்பரங்களை வெளியிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தற்போதைய நிர்வாகம் இந்த நோக்கத்துக்காக அதிகாரத்தை நாடியதா என்று கேள்வியெழுப்பிய தலதா எம்.பி,கொழும்பையும் இழப்பதைப் பற்றி நாட்டின் குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.