வன்முறைக்கும்பலுக்கு யாழில் பொலிஸ் வலைவீச்சு!!
யாழ்ப்பாணம்- தாவடி, தோட்டவெளியில் வன்முறைக் குழுவொன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே தாவடி- தோட்டவெளியில் கிடந்த 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை