புதிய கட்டளை தளபதி இன்று பொறுப்பேற்பு!!

 


யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு இன்று காலை தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இலங்கை இராணுவத்தில் இரண்டாவது உயரிய நியமனமான இராணுவ பிரதம அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு இராணுவ கட்டளை தலைமையகத்தில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

அதன் படி இன்று காலை அவர் பலாலி ராணுவ கட்டளை தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.