வலைப்பாடு கடற்கரையில் 6 கடல் ஆமைகள் கரையொதுங்கின!

 


மன்னார்- வலைப்பாடு கடற்கரையில் மேலும் 6 கடல்ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கடற்படை அதிகாரிகள் ஆமைகளின் சடலங்களைக் கண்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து , வனவிலங்கு துறையின் வடக்கு மாகாண கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பி. கிரிதரன் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்காக அரசு ஆய்வாளர் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வனவிலங்கு திணைக்களத்திற்கு பொறுப்பான வடக்கு மாகாணத்தின் கால்நடை அலுவலகம் மற்றும் மன்னார் வனவிலங்கு துறை அலுவலகம் மேற்கொண்டு வருகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.